இலன்:
தைவான் நாட்டிலல் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தைவான் நாட்டில் இலன் நகரில் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் இன்று நகரில் காலை 9 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து மலைப்பகுதியில் நடந்ததால், ஹெலிகாப்டரில் இருந்தவர்களை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், 8 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து ஹெலிகாப்டர் விபத்து இயந்திரக் கோளாறு அல்லது சுற்றுச்சூழல் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தைவான் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.