காத்தான்குடி:
இலங்கை பள்ளிவாசல் ஒன்றில் தோண்ட தோண்ட ஆயுதங்கள் சிக்கியுள்ளதாக சிங்கள இணையதளம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் கும்பல் காத்தன்குடியை மையமாக கொண்டே செயல்பட்டது. அவர்களுக்கென தனியாக பள்ளிவாசலையும் கும்பல் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த பள்ளிவாசலில் ராணுவத்தினர் நடத்திய திடீர் சோதனையில், ஏராளமான வாள்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டன எனவும், தற்போது நடைபெற்ற சோதனையில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படதாகவும் சிங்கள இணையதள் செய்தி வெளியிட்டுள்ளது.