சென்னை:
சென்னையில் பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன், லாரி மோதி உயிரிழந்தார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தவருமான, பாலகிருஷ்ணன் சென்னையை ஷெனாய் நகரை சேர்ந்தவர்.
கடந்த 2010ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார். இதனையடுத்து, அவர், கடந்த சில ஆண்டுகளாகவே விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளாமல், அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தார்.
பாலகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்புதான் விடுமுறையில் சென்னை வந்துள்ளார். ஊருக்கு வந்த அவர் தனது உறவினரைப் பார்த்துவிட்டு தோழியுடன் அரும்பாக்கம் வழியாக பைக்கில் நேற்றிரவு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, லாரி ஒன்ற அவரை முந்திசெல்லும்போது, நிலை தடுமாறி லாரியில் நசுங்கி பாலகிருஷ்ணா உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.