புதுடெல்லி:
ஆந்திர ஆளுநராக தன்னை நியமித்துள்ளதாக வந்த செய்திக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அந்த டுவிட்டர் பதிவை பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டநிலையில், தற்போது அதனை சுஷ்மா சுவராஜ் மறுத்துள்ளார்.
இவரின் உடல்நிலை கருத்தில்கொண்டு, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.,வில் இவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை குறிப்பிடத்தக்கது.