சென்னை:
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் நடைபெறவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2016ம் ஆண்டு மாடிப்படியில் விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு காலில் டைட்டானியம் கம்பி ஒன்று வைக்கப்பட்டது.
பின்னர் சினிமாவிலும், அரசியலிலும் பிஸியாக இருந்ததன் காரணமாக கம்பியை அகற்றவில்லை. இந்நிலையில் தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி நாளை அக்கம்பியை அகற்றுவதற்காக ஆபரேஷன் செய்யப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சில நாட்கள் ஓய்வுக்குப்பின் தன் பணியை அவர் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.