சென்னை:
நடிகர் சூர்யாவிடம் கேள்வி கேட்டு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ஜிகே’ படம் இம்மாதம் 31ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துகொண்டிருந்தார்.
அப்போது கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கேள்வி கேட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த வீரரை உங்களுக்கு பிடிக்கும் என கேட்டுள்ளார். அதற்கு எனக்கு தோனி தான் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா கேள்வி கேட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.