சூரத்:
குஜராத் மாநிலம், சூரத் பயிற்சி மைய கட்டடத்தின் 2வது மாடியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 15க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீயை அணைக்கும் முயற்சியில் 18 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். தகவலறிந்து சூரத் போலீஸ் கமிஷனர் சதீஷ்குமாரர் மிஸ்ரா அங்கு விரைந்துள்ளார். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தை அறிந்த பிரதமர் மோடி, இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய குஜராத் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி குஜராத் அரசு அறிவித்துள்ளது.