சூரத்:
குஜராத் மாநிலம், சூரத் பயிற்சி மைய கட்டடத்தின் 2வது மாடியில் நேற்று திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 15க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய குஜராத் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி குஜராத் அரசு அறிவித்தது.
இந்நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.