சென்னை:
தமிழகத்தில் சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10,000 கோடி செலவில் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்துவந்த நிலையில், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த திட்டத்துக்கு தடை விதித்தது. 8 வழிச்சாலை அமைப்பதற்கான திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 31ம் தேதி மேல்முறையீடு செய்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.