காஷ்மீர் செல்ல சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி

காஷ்மீர் செல்ல சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி

புதுடெல்லி:

மா.கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் காஷ்மீர் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.

அப்போது, சீதாராம் யெச்சூரி, முகமது ஜலீல் உள்ளிட்டோர் அவர்களது நண்பர்கள், உறவினர்களை சந்திக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மற்றும் கட்சி நிர்வாகியான யூசுப் தரிகாமியை நண்பராக சந்திக்கலாம் என்றும் முகமது ஜலீல் உள்ளிட்டோரும் தங்களது உறவினர்களை சந்திக்கலாம் எனகூறி, அவர்கள் காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

நாட்டு மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் தொடர்பு கொள்வது அவசியம் என கருத்து தெரிவித்த நீதிமன்றம், உறவினர்கள், நண்பர்களை மட்டும் தான் சந்திக்க வேண்டும் என்றும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது எனவும் அறிவுறுத்தியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்