ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி கூட்டணியின் ‘தர்பார்’ பட ரஜினி கெட் அப் சமுக வலைதளங்களில் பரவியது.
இந்த படம் உலகம் முழுவதும் தற்போது வைரலாகி வருவதால் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அப்சட்டில் உள்ளனர்.
பொங்கலுக்கு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ரஜினி நடித்து வரும் ’தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக மும்பை கடற்கரையில் ரஜினியின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
ரஜினியை கண்டதும் ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். நேற்று காட்சியை முடித்துவிட்டு நடிகர் ரஜினி தனது வாகனத்தில் ஏற வந்த போது அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் அவரை புகைப்படமும் வீடியோவும் எடுத்துள்ளனர்.
அப்போது மும்பை மாநகர காவல்துறை உடையில் நடிகர் ரஜினி செம ஸ்டைலாக இருக்கும் காட்சியை பலர் தங்கள் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இந்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஏராளமான புகைப்படங்கள் வெளியான நிலையில் முருகதாஸ் கெடுபிடி காட்டினார். தன்னுடைய ட்விட்டர் பக்கங்களில் புலம்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.