சச்சின் வரவேற்பு

  • In Sports
  • October 16, 2019
  • 195 Views
சச்சின் வரவேற்பு

மும்பை:

கிரிக்கெட்டில் பின்பற்றப்பட்டு வந்த சூப்பர் ஓவர் பவுண்டரி ரூல்ஸ் நீக்கப்பட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் வரவேற்றுள்ளார்.

ஐசிசி.,யின் கிரிக்கெட் விதிப்படி, ஐசிசி தொடர்களின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சூப்பர் ஓவர்கள் சமனில் முடிந்தால், அதிக பவுண்டரிகளை விளாசிய அணிக்யே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

இந்த விதிமுறையால் தான் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. ரசிகர்களின் மனதை வென்றிருந்தாலும் நியூஸிலாந்து அணி கோப்பையை இழந்தது.

இதற்கு கிரிக்கெட் ரசிகர்களிடையேயும், வல்லுநர்களிடையேயும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை நீக்கவும் பலர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், துபாயில் நடைபெற்ற இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில், சர்ச்சைக்குரிய பவுண்டரி விதிமுறையை ஐசிசி நீக்கியுள்ளது.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், இது முக்கியமான முடிவாக கருதுகிறேன். எப்போது இரண்டு அணிகளும் வெற்றி பெறாத நிலையில் இருக்கிறதோ, அப்போது இது ஒரு நியாயமான முடிவை எட்டுவதற்கு வழிவகுக்கும் என வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்