பாலிவுட் படக்காட்சி ஒன்றில் நடிகை சன்னிலியோன் கூறிய மொபைல் நம்பரால் பாதிக்கப்பட்ட இளைஞரிடம் மன்னிப்பு கேடாடர்.
ஆபாச படங்களின் மூலம் பிரபலமான சன்னிலியோன் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது ‘வீரமாதேவி’ என்ற வரலாற்று படத்தில் நடித்துள்ளார்.
ரோகித் ஜுராஜ் சவுகான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அர்ஜுன் பாட்டியாலா’ படம் கடந்த சமீபத்தில் வெளியானது. இதில் ஒரு காட்சியில் சன்னிலியோன் ஒரு போன் நம்பரை கூறியுள்ளார். இந்த நம்பர் சன்னி லியோனுடையது என்று ரசிகர்கள் தொர்ந்து போன் செய்து வந்துள்ளனர்.
ஆனால், இந்த நம்பர் டெல்லியை சேர்ந்த புனித் அகர்வால் என்பவருக்கு சொந்தமானது. தினமும் 400க்கும் அதிகமான அழைப்புகள் வருவதால் பெரும் அவதிக்குள்ளானார். இதனையடுத்து, அவர் போலீசில் புகார் அளித்தார். மேலும் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த செய்தியை அறிந்த சன்னி லியோன், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.