‘‘கருத்து வேறுபாடு இயல்பே’’ தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

‘‘கருத்து வேறுபாடு இயல்பே’’ தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

புதுடெல்லி:

இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகளுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்படுவது இயல்பே என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்து பதிவு செய்யப்படவில்லை எனவும், தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளில் பங்கேற்கப்போவதில்லை எனவும் தேர்தல் ஆணையர் லவாசா நேற்று தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணையரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் கடந்த காலங்களிலும கருத்து வேறுபாடு இருந்துள்ளன எனவும், கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பே என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்