அரசு பஸ் மீது லாரி மோதல்; மூவர் பலி

அரசு பஸ் மீது லாரி மோதல்; மூவர் பலி

ஒசூர்:

ஓசூர் அருகே அரசு பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பள்ளம் என்ற இடத்தில், திருவண்ணாமலையிலிருந்து ஒசூருக்கு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கன்டெய்னர் லாரி டயர் வெடித்து அரசு பேருந்து மீது மோதியது.

இந்த கோர விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் முத்து, நடத்துனர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். படுகாயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சூளகிரி அடுத்த சாமல்பள்ளம் அருகே விபத்தில் பலியான ஓட்டுனர் வேடியப்பன்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்