குடும்பமே தற்கொலை; அரசுக்கு எச்சரிக்கை

குடும்பமே தற்கொலை; அரசுக்கு எச்சரிக்கை

ஒசூர்:

ஒசூர் அருகே போலியான ஆவணங்களால் பட்டா மாற்றப்பட்டதை ரத்து செய்ய £விட்டால், குடும்பமே தற்கொலை செய்துக்கொள்ள இருப்பதாக எச்சரிக்கை வி டுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி அருகே உள்ள தாசரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரியாஸ். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவரது தாத்தாவின் பெயரிலான 15 ஏக்கர் நிலம் இரு பகுதிகளில் இருக்கின்றன.

தன்னுடைய தந்தை, இரண்டு சித்தப்பாக்கள் ஆகிய மூவருக்கு பாத்தியப்பட்ட இந்த நிலத்தில் தாசரப்பள்ளி சாலையோரமாக உள்ள 7.5 ஏக்கர்களில் தனது இரண்டு சித்தப்பாக்களும் 4 மற்றும் 3.5 ஏக்கர்கள் என இருவர் மட்டுமே போலியான ஆவணங்களை கொண்டு முறைகேடாக பட்டா பெற்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தாசரப்பள்ளி விஏஓ ஜார்ஜ் என்பவரே மூளையாக செயல்பட்டிருப்பதாக கூறும் சக்கரியாஸ் குடும்பத்தினர்,

அரசு இந்த முறைக்கேடான பட்டா மாறுதலை ரத்து செய்து மூன்றாக பிரித்து ப £த்தியப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அரசு இதை செய்ய தவறினால் குடும்பத்துடனே தற்கொலை செய்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்கிறார் வேதனையுடன் சக்கரியாஸ் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்