குழந்தைகளுடன் தாய் தற்கொலை

குழந்தைகளுடன் தாய் தற்கொலை

ஒசூர்:

ஒசூர் தேன்கனிக்கோட்டை அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டார். தேன்கனிக்கோட்டை அடுத்த கொடகரை மலைக்கிராமத்தில் சேர்ந்தவர் பசவராஜ்-நாகம்மா தம்பதி. இவர்களுக்கு மகன் பிரேம்குமார் (3), மகள் பிரியம்மா (7) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்றும் இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தைகளுடன் நாகம்மா காணாமல் போனாதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பசவராஜ் அஞ்சேட்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அந்த கிராமத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க அப்பகுதி மக்கள் சென்றபோது கிணற்றில் சடலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் கிணற்றில் இருந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசார் விசாரணை இறந்தவர்கள் பசவராஜின் மனைவி, மற்றும் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. நாகம்மா குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து நாகம்மாவின் கணவர் பசவராஜ் மற்றும் குடும்பத்தினரிடம் அஞ்சேட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் மற்றும் குழந்தைகள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி யுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்