தாய் தலை துண்டிப்பு; தப்பிய குழந்தை

தாய் தலை துண்டிப்பு; தப்பிய குழந்தை

ஒசூர்:

ஒசூர் ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் தலைவைத்து குழந்தையுடன் தாய் தற்கொலை; சிறு காயங்களுடன் பெண் குழந்தை உயிர் தப்பியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில் நிலையம் பெங்களூர் பாதையில் அதிகாலை பெங்களூரை நோக்கி மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரயிலில் 30 வயது மதிக்கத்தக்க பெண் தனது குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றார்.

இதில், தாய் தலை துண்டான நிலையில், 10 மாத பெண் குழந்தை சிறு காயங்களுடன் உயிர் தப்பியது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்