தூத்துக்குடி:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றியே தெரியாது என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறுகையில், நிதியமைச்சராக இருந்த அருண்ஜெட்லி மற்றும் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு பொருளாதாரமே தெரியாது என விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், ஜிஎஸ்டி, ஆன்லைன் கணக்கு தாக்கல் குறித்து பேசுகையில், கிராமத்தில் மின்சாரமே இல்லை; எப்படி அவர்கள் தாக்கல் செய்வார்கள் என சுப்பிரமணிய சாமி விமர்சனம் செய்தார்.