பரும்:
சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிக்கு இந்திய வீரர் சுபாங்கர் தேய் முன்னேறினார்.
டென்மார்க்கில் நடந்துவரும் சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப்போட்டியில், இந்தியாவின் சுபாங்கர் தேயுடன், ரஷ்யாவின் செர்ஜி சிரன்ட் மோதினார்.
முதல் செட்டில் 21-17 என கைப்பற்றிய சுபாங்கர், 2வது செட்டில் 21-7 என அபாரமாக விளையாடி சுபாங்கர் வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு நுழைந்தார்.