ஆசிரியரே இல்லை.. தேர்வு எதற்கு? மாணவிகள் சாலை மறியல்

ஆசிரியரே இல்லை.. தேர்வு எதற்கு? மாணவிகள் சாலை மறியல்

புதுச்சேரி:

புதுச்சேரி, முதலியார்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்கள் நியமனம் செய்யாததால் மாதாந்திர தேர்வை புறக்கணித்து மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ், கணக்கு, மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு உரிய ஆசிரியர்களை நியமித்து விட்டு, மாதாந்திர தேர்வை நடத்தக்கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏவும் பங்கேற்றார்.

தகவலறிந்து அங்கு விரைந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்