‘‘போகாதீங்க’’ கதறி அழும் மாணவர்கள்

‘‘போகாதீங்க’’ கதறி அழும் மாணவர்கள்

பொள்ளாச்சி:

தனது பள்ளி ஆசிரியரை பணிமாறுதலில் அனுப்ப மறுத்து போகாதீங்க சார் என கதறி அழும் மாணவர்களால் பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள வசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக கணி ஆசிரியராக செந்தில்குமார் பணியாற்றி வந்தார்.

அவருக்கு வணிகவியல் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணி மாறுதலில் செல்ல இருந்தார்.

இந்நிலையில், பணி மாறுதல் குறித்து தகவலறிந்த மாணவர்கள், ஆசிரியர் செந்தில்குமாரை சூழ்ந்துகொண்டு வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த பாசப்போராட்டத்தில் மாணவர்கள் போகாதீங்க சார் நீங்கள் எங்களுக்கு வேணும் என கதறி அழுத காட்சி பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் பெரும் சோகத்தில் ஆழ்தியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்