‘பீஸ்’ கட்டாததால் வீட்டை விட்டு ஓடிய மாணவி

‘பீஸ்’ கட்டாததால் வீட்டை விட்டு ஓடிய மாணவி

போபால்:

பள்ளியின் கட்டணம் கட்டாததால் வீட்டை விட்டு ஓடிவந்த மாணவியை போலீசார் மீட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம், சாகர் பகுதியில் ஒரு பள்ளியில் படித்துவந்த 12ம் வகுப்பு மாணவி, பள்ளியின் கட்டணம் கட்டாததால் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். சாகர் நகரத்தில் தனியாக தவித்து கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவியை போலீசார் மீட்டுள்ளனர்.

மாணவியிடம் விசாரணை நடத்தியபோது, அழுதுகொண்டே பள்ளியில் கட்டணம் செலுத்தாததால், தினமும் பள்ளியில் பல அவதூறுகளையும், திட்டுகளையும் சந்தித்தேன் எனவும், வீட்டில் பணம் கேட்டதற்காக அவர்களும் என்னை திட்டினார்கள் என அவர் தெரிவித்தார்.

மேலும, இரண்டு பக்கமும் என்னை அவதூறாக பேசியதால், மன உளைச்சலுக்கு ஆளான நான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன் எனக் கோரியுள்ளார்.

இதனையடுத்து, இதுகுறித்த தகவலை சனோ காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். பின்னர், அவரை சமாதானப்படுத்தில பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்