விபத்தில் மாணவி பலி; பொதுமக்கள் சாலை மறியல்

விபத்தில் மாணவி பலி; பொதுமக்கள் சாலை மறியல்

ஒசூர்:

ஒசூர் அருகே டிப்பர் லாரி மோதி அரசுப்பள்ளி மாணவி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலால் ஒரு மணிநேரம் போக்குவரத்து ப £திப்புக்குள்ளானது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பசப்பா (எ) புட்டப்பா தனது இரண்டு பேத்திகளை (சவுந்தர்யா,வினிதா) இருசக்கர வாகனத்தில் தினமும் கெலமங்கலத்தில் உள்ள அரசுப்பள்ளியில் விடுவது வழக்கம்.

இன்றும் தனது பேத்திகளுடன் ஜெ.காருப்பள்ளியிலிருந்து கெலமங்கலம் பிரதான வளைவில் சென்றபோது, கெலமங்கலத்திலிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி அதிவேகமாக ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மே £தியதில் வினிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயங்களுடன் பசப்பா, சவுந்தர்யா ஆகிய இருவரும் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் லாரிகளின் அதிக வேகத்தால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி வினிதாவின் உறவினர்களும், பொதுமக்களும் கெலமங்கலம் – தேன்கனிக்கோட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈ டுபட்டனர் பின்னர் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளின் பேச்சுவ £ர்த்தைக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது இதனால் போக்குவரத்து ஒருமணிநேரம் தடைப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்