சிறுவன் சாவில் மர்மம்

சிறுவன் சாவில் மர்மம்

ஒசூர்:

ஓசூரில், நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வெங்கடேஷ் நகர், வெங்கடரமணப்பா என்பவரின் மகன் சந்திரேஷ்(12), இவன் அரசுப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் கோவில் முன்பாக சிறுவன் துளசி விற்றுவந்ததாகவும் துளசி விற்ற 2 ஆயிரம் ரூபாயை வைத்திருந்த சந்திரேஷை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அருகில் உள்ள குளத்தில் குளிக்க அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.
சிறிது நேரத்தில் அவர்களது நண்பர்கள் சந்திரேஷ் நீரில் மூழ்கிவிட்டதாக கூறியதாகவும், உடனடியாக சென்ற பெற்றோர் சந்திரேஷை குளத்தில் பிணமாக மீட்டுள்ளனர்.

சந்திரேஷ் 2 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த நிலையில், அவன் குளத்தில் மூழ்கி மீட்டபோது பணமில்லாததால் தானாக மூழ்கி இருக்க வாய்ப்பில்லை என சிறுவனின் பெற்றோர் அட்கோ போலிசில் புகார் அளித்துள்ளனர்.

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சந்திரேஷின் உயிரிழப்புக்குறித்து போலிசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்