புதுடெல்லி:
தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளாதக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாகவும், அதற்கு ‘பவன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயலால் இந்திய துணை கண்டத்துக்கு மழையோ அல்லது பாதிப்போ இருக்காது. இந்த புயல் மேற்கில் நகர்ந்து ஓமன் கடற்கரையை அடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.