தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; சிபிஐ அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; சிபிஐ அறிக்கை தாக்கல்

சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

சிசிடிவி பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பலியான 13 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கலவரத்தில் காவல் அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகளின் பங்கு, போராட்டகாரர்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்