ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

சென்னை:

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகள் வழக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஆலையை பராமரிப்புக்கு திறப்பது தொடர்பாக எந்தவிதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசு, மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று தமிழக அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து தமிழக அரசின் பதில் மனு குறித்து ஸ்டெர்லைட் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் பிரதான வழக்கில் இறுதி விசாரணை ஜூன் 27ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்