எஸ்டிபிஐ கட்சியினர் கைது

எஸ்டிபிஐ கட்சியினர் கைது

ஒசூர்:

ஒசூரில் குடியுரிமை திருத்தசட்ட மசோதா நகலை எரிக்க முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த குடியுரிமை திருத்த சட்டமசோதா மத ரீதியாக பிளவுப்படுத்துவதகவும், முஸ்லீம்களை குறிவைத்து மசோதா திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறி

ஓசூர் ராம்நகரில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மற்றும் அமித்ஷா விற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பியதுடன் குடியுரிமை சட்ட மசோதா நகலை எரிக்க முயன்றதால் 30க்கும் மேற்ப்பட்டோர் ஒசூர் நகர போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

மண்டபத்தில் அடைக்கப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்