சிலைக்கடத்தலை விசாரித்த சிறப்பு அமர்வு கலைப்பு!

சிலைக்கடத்தலை விசாரித்த சிறப்பு அமர்வு கலைப்பு!

சென்னை:

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கோவில் சிலைகள் மற்றும் நகைகள் திருட்டு சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. கடந்த 2018 ஜூலையில் நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.

சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு ஓராண்டு ஆனநிலையில், தற்போது வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக, இந்த சிறப்பு அமர்வு நியமித்த அறிவிப்பாணையை மாற்றியமைத்தது உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. மேலும், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை பொதுநல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளே விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்