சென்னை:
தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணம் பூசி அவமதித்துள்ளனர். இதற்கு பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்படவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.