சென்னை:
மாகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்ரேவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தனது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்திட வாழ்த்துக்கள் எனவும், மகாராஷ்டிராவின் புதிய அரசு அங்கு வாழும் தமிழர்களின் பாதுகாப்புக்காக அவர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில சுயாட்சி, கூட்டாட்சி உரிமைக்காக பேசுவதில் உத்தவ் தாக்கரே இணைவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.