சென்னை:
விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பது வேதனை அளிக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விஷவாயு பலி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கழிவுகளை அகற்றும் பணியில் நவீன கருவிகளை பயன்படுத்த வேண்டும்.
இந்த விஷயத்தில் மனித மாண்பை காக்க நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.