சென்னை:
இந்திமொழி பேசாத மாநிலங்களில், 8ம் வகப்பு வரை இந்தி கட்டாயம் என தேசிய கல்விக்கொள்ளை வரைவு அறிக்கையை மத்திய வெளியிட்டது.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தி கட்டாயம் இல்லை என மத்திய அரசால் வரைவு அறிக்கையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு, மு.க.ஸ்டாலின், ‘‘கருணாநிதி பிறந்தநாளில் மும்மொழி வரைவு திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கருணாநிதி வாழ்கிறார் என்பதை காட்டுகிறது’’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தலைவர் கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக நாம் கொண்டாடும் வேளையில், இந்தி கட்டாயப் பாடம் என்பதை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது.
ஆதிக்க இந்தித் திணிப்பை எந்நாளும் தகர்த்து அன்னைத் தமிழைக் காப்போம்!#செம்மொழிநாள் #HBDKalaignar96 pic.twitter.com/mQRW3kvPVf
— M.K.Stalin (@mkstalin) June 3, 2019