கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

சென்னை:

தமிழகத்துக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க உத்தரவிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் அலுவலகத்தின் வேண்டுகோளை ஏற்று, திருவனந்தபுரத்திலிருந்து 20 லட்சம் தண்ணீரை ரயில் மூலம் சென்னைக்கு அனுப்ப கேரள அதிகாரிகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கேரள முதல்வருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

தண்ணீர் பிரச்னையால் தவிக்கும் தமிழக மக்களுக்கு உதவ கேரள அரசோடு, தமிழக அரசு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்