சென்னை:
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜினாமா முடிவிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து உறுதியுடன் இருந்துவருகிறார்.
பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர் அகமது படேல், ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் ஆகியோர் ராகுல்காந்தியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ராகுல்காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுகையில், காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலகவேண்டாம். தேர்தலில் தோற்றாலும் மக்களின் மனங்களை வென்றுள்ளீர். காங்கிரஸ் தலைவராக தொடருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.