சென்னை:
மகாராஷ்டிரா சம்பவத்தை அநாகரிகம் என்பதா; அசிங்கம் என்பதா என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பா.ஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சம்பவத்தை அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது? எனவும், அரசியல் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து, குப்பைத் தொட்டியில் வீசி உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.