சென்னை:
சென்னையிலிருந்து சேலம் வரையிலான 8 வழிச்சாலைக்க உயர்நீதிமன்றம் தடைவிதித்த நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 8 வழிச்சாலை திட்டத்திற்காக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செய்த மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்ற மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
மேலும், தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கூட தராமல் மோடி அரசு அவமதித்துள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்துடன் பாஜக அரசு இனியும் விபரீத விளையாட்டு நடத்த வேண்டாம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.