சென்னை:
திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்டவுட்டுகள் வைக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் நேற்று உயிரிழந்ததால் கட்சினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தி.மு.க. நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்டவுட்கள் வைக்க கூடாது எனவும், அறிவுரையை திமுகவினர் மீறினால் கடும் நடவடிக்கை எனவும், பேனர் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.