சென்னை:
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நிறுத்தியது அதிமுகவுக்கு மரண அடி என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் ஸ்டாலின், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்னும் முழுமையாக வெளிவரவில்லை, தீர்ப்பு குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.
மேலும், 9 மாவட்டங்களில் தேர்தலை உச்சநீதிமன்றம் நிறுத்தியது, அதிமுகவுக்கும், அரசுக்கும் கிடைத்த மரண அடி எனவும், மக்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது எனவும் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.