சென்னை:
சிஏஏ.,வுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து எதிர்பார்த்த நிலையில், 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிஏஏ.,வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்தின் நகல் ஜனாதிபதியிடம் 5 நாளில் ஒப்படைக்கப்படும். ஒரு கோடி பேரின் கையெழுத்தை எதிர்ப £ர்த்த நிலையில் 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
வேலை வாய்ப்பின்மையை திசை திருப்பவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது என அவர் தெரிவித்தார்.