சென்னை:
தமிழகத்துக்கு நல்லாட்சி விருது வழங்கியவர்களை அடிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள சர்ச் ஒன்றில், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் திருமணம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, மத்திய – மாநில அரசைப்போன்று அமைதியாக இருக்கக் கூடாது; மணமகள், மணமகன் இருவரும் வீட்டில் கேள்வி கேட்க வேண்டும். தமிழகத்தில் கமிஷன் ஆட்சி நடைபெறுவதாகவும், எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமையை கொண்டு வந்தவர் பெரியார். இன்று அவரையே விமர்சிக்கும் நிலை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்காக விருது பெற்றுள்ளதாக முதலமைச்சர் கூறி வருகிறார். விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.