சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
மேலும் முரசொலி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று திறந்து வைப்பது குறிப்பிடத்தக்கது.