சென்னை:
பொங்கல் விடுமுறை நாட்களில் இந்தி மொழி ஆய்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பொங்கல் விடுமுறை நாட்களில் இந்தி மொழி பயன்பாடு குறித்து ஆய்வு செய்வது கடும் கண்டனத்திற்குரியது. ஆய்வை ரத்து செய்து, ஊழியர்கள் பொங்கல் திருநாளை கொண்டாட வழிவகை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.