சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார்.
கடந்த ஒரு வாரமாக மு.க.ஸ்டாலினை சந்திக்க சந்திரசேகர ராவ் நேரம் கேட்டிருந்த நிலையில், இன்று மாலை அவர் சந்தித்து பேசினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பு மூன்றாவது அணி அமைப்பதற்கான சந்திப்பு என கூறப்படுகிறது. உடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இருந்தனர்.