ஆடி கார் சேதம்; ஸ்ரீரெட்டி போலீசில் புகார்

  • In Cinema
  • January 1, 2020
  • 203 Views
ஆடி கார் சேதம்; ஸ்ரீரெட்டி போலீசில் புகார்

சென்னை:

தனது ஆடி காரை சேதப்படுத்தியுள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறாரர்கள் என நடிகை ஸ்ரீரெட்டி ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து ஆந்திர திரையுலகில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சென்னைக்கு குடியேறிய அவர், ராகவ லாரன்ஸ் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீதும் குறம் சாட்டினார்.

இதனையடுத்து தற்போது ‘ரெட்டியின் டைரி’ என்ற கதையில் நடித்துவரும் ஸ்ரீரெட்டி, சென்னை கோயம்பேடு அன்பு நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனது வீட்டு வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த ஆடி காரை அப்பகுதியில் சின்னத்திரை தொடர்களில் படப்பிடிப்பு நடத்தி வரும் சிலர் சேதப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் தயாரிப்பு மேலாளராக இருக்கும் சந்தோஷ் என்பவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்