கொழும்பு:
இலங்கையின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 16ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையர் மஹிந்த தேஷப்ரியா கூறுகையில், அக்டோபர் 7ம் தேதி அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறும் எனவும், வரும் நவம்பர் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிபர் தேர்தல் தொடர்பான ஆணை இன்று இரவு அரசிதழில் வெளியாகும் என அவர் தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் இலங்கை சுதந்திர கட்சி வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.