ராணுவ வாகனம் மீது ரயில் மோதி 6 பேர் பலி!

ராணுவ வாகனம் மீது ரயில் மோதி 6 பேர் பலி!

கொழும்பு:

இலங்கை ராணுவ வாகனம் மீது ரயில் மோதியதில் ராணுவ வீரர்கள் 6 பேர் பலியாகினர்.

இலங்கையின் கிளிநொச்சி அருகே ரயில்வே லெவல் கிராசிங்கில், ராணுவ வாகனம் ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது கொழும்பு நகரிலிருந்து யாழ்பாணம் நோக்கி சென்ற ரயில், ராணுவ வாகனத்தின் மீது மோதியது.

இதில், ராணுவ வாகனத்தில் பயணித்த 7 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயும், படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற 3 வீரர்களில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 6 ராணுவ வீரரகள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்