செஸ்டர் லீ ஸ்ரீட்:
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக இலங்கை 203 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 35வது லீக் ஆட்டம் செஸ்டர் லீ ஸ்ரீட்டில் நடைபெறுகிறது. இதில் இலங்கை அணியும் தென்னாப்ரிக்கா அணியும் மோதுகிறது.
முதலில் டாஸ் வென்ற தென்னாப்ரிகா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்கள் எடுத்தது.
இதனைத்தொடர்ந்து 204 ரன்களை இலக்காக்கொண்டு தென்னாப்ரிக்கா அணி விளையாடி வருகிறது.