கண்ணீர்விட்ட ஸ்ரீதேவி மகள்

  • In Cinema
  • January 20, 2020
  • 171 Views
கண்ணீர்விட்ட ஸ்ரீதேவி மகள்

சென்னை:

கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து தான் கண்ணீர் விட்டதாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், கடந்த 2018ம் ஆண்டு முதல் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், தமிழில் ஜான்வி கபூர் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நேரத்தில், சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாக வந்த செய்தி புரளியில் முடிந்தது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜான்வி கபூர் அளித்த பேட்டியில், நான் கீர்த்தியின் ரசிகை எனவும், ‘மகாநடி’ படத்தை கணக்கில்லாமல் பல முறை பார்த்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

மேலும், அந்த படத்தை பார்த்து அழுதுகொண்டே கீர்த்தி சுரேஷுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் செய்தது அவர் மீது இருந்த உண்மையான அன்பினால் தான் என ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்